வானியலாளர்கள், பிரபஞ்சத்தில் மிகப்பெரிய நீர் தேக்கத்தை கண்டுபிடித்துள்ளனர்! பூமியிலிருந்து 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள APM 08279+5255 என்ற குவாசார் அருகே இந்த பிரம்மாண்டமான நீர் தேக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்கம், பூமியில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் உள்ள நீரை விட 140 டிரில்லியன் மடங்கு அதிகமான நீரை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நீர், நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் பரப்பளவில் பரவியுள்ள ஒரு வாயு மண்டலத்தில் உள்ளது. இந்த வாயு மண்டலம், நமது சூரியனை விட 20 பில்லியன் மடங்கு பெரிய ஒரு கருந்துளையைச் சுற்றி வருகிறது. இந்த குவாசார் மிகவும் பிரகாசமானது, ஆயிரம் டிரில்லியன் சூரியன்களுக்கு சமமான ஆற்றலை வெளியிடுகிறது. குறிப்பிட்ட இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள வாயு மிகவும் வெப்பமாகவும், அடர்த்தியாகவும் உள்ளது. இது வழக்கமாக விண்மீன் மண்டலங்களில் காணப்படும் வாயுவை விட ஐந்து மடங்கு வெப்பமாகவும், அடர்த்தியாகவும் உள்ளது. இந்த வாயுவில் கார்பன் மோனாக்சைடு போன்ற மூலக்கூறுகளும் உள்ளன. இந்த மூலக்கூறுகள், கருந்துளையின் வளர்ச்சி அல்லது புதிய நட்சத்திரங்கள் உருவாகுவதற்கு உதவும்இந்த கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் நிலவிய நிலைமைகள் குறித்து நமக்கு புதிய தகவல்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.