சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15 -ஆம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றும் விழா டெல்லி செங்கோட்டையில் நடைபெறும். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.