ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ம் தேதி அக்டோபர் 31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் செப்டம்பர் 11ம் தேதியும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதியும் வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதி இன்றி வெளிமாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.