சிவகங்கை மாவட்டத்தில் ஒன்பது நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ். பி அரவிந்தன் பரிந்துரையின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அக்டோபர் 27ஆம் தேதி காளையார் கோவிலில் இருந்து மருதபாண்டியர் குருபூஜை நடைபெறுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அங்கு 9 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்