பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் வழக்கு விசாரணைக்காக நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் இம்ரான் கானை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ- இன்சாப் (பிடிஐ) நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தது. இதனால் நேற்று அங்கு வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.