திருப்பதியில் ஓராண்டில் ரூ.1,450 கோடி உண்டியல் காணிக்கை

January 14, 2023

திருப்பதியில் ஓராண்டில் ரூ.1,450 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா கூறுகையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது. 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.1,450.41 கோடி காணிக்கை கிடைத்தது. மேலும் 11.54 கோடி லட்டு விற்கப்பட்டது என்றும், 4.77 கோடி பக்தர்களுக்கு […]

திருப்பதியில் ஓராண்டில் ரூ.1,450 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா கூறுகையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது. 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.1,450.41 கோடி காணிக்கை கிடைத்தது. மேலும் 11.54 கோடி லட்டு விற்கப்பட்டது என்றும், 4.77 கோடி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu