மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் 

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் தனி உறுப்பினர்கள் தீர்மானங்களாக பல்வேறு கட்சிகள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை முன்வைத்து தீர்மானம் கொண்டு வந்தனர். புதுச்சேரி மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், ஒன்றிய உள்துறை […]

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் தனி உறுப்பினர்கள் தீர்மானங்களாக பல்வேறு கட்சிகள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை முன்வைத்து தீர்மானம் கொண்டு வந்தனர். புதுச்சேரி மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிய தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu