விரைவில் 15000 போலீஸ்காரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என போலிஷ் மந்திரி பரமேஸ்வர் அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில் கூறியதாவது, துமகூருவில் மாநிலத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 15000 போலீஸ்காரர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் 53 பேர் தவறு செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக மறுத்தேர்வு நடத்துவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் மறுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது.
இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்வது அரசின் கடமையாகும். இதுபற்றி விரிவாக ஆலோசித்து விரைவில் சரியான முடிவை அரசு எடுக்கும் என்று கூறினார்.