காசாவில் 150-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று ஆறு சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
வடக்கு காசாவில் சேஜாயா என்னும் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதில் 150 க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளது. மேலும் ஆறு சுரங்கங்களை தகர்த்துள்ளது. சுரங்கத்தில் ஆயுதங்கள் மற்றும் உளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் ஆறு கிலோமீட்டர் நீளம் கொண்ட சுரங்கங்களில் மேலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கே உட்புற வழிகளில் மறைவிடங்களும் உள்ளதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.