1,500 காலாவதியான அரசு பேருந்துகள் கழிவு செய்யப்படும்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள காலாவதியான 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில் 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான அரசின் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வரும் 1-ம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இது தொடர்பான மத்திய அரசு உத்தரவை தமிழக அரசு பரிசீலித்து […]

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள காலாவதியான 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில் 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான அரசின் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வரும் 1-ம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இது தொடர்பான மத்திய அரசு உத்தரவை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எனவே தமிழக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள 20,926 பேருந்துகளில் சுமார் 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும்.

இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் 500 பேருந்துகளும் அடங்கும். மேலும் அரசு அறிவித்தபடி 2,213 பேருந்துகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும். அதன்படி, ஏற்கெனவே 442 பேருந்துகள் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu