தமிழகத்துக்கு அரிசிக்கு பதில் கூடுதலாக 15 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்க வேண்டும் - அமைச்சர் சக்கரபாணி 

தமிழகத்துக்கு அரிசிக்கு பதில் கூடுதலாக 15 ஆயிரம் டன் கோதுமையை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, செயலர் டி. ஜகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளது. இங்கு கோதுமை உற்பத்தி இல்லாததால் கோதுமையின் தேவைக்காக […]

தமிழகத்துக்கு அரிசிக்கு பதில் கூடுதலாக 15 ஆயிரம் டன் கோதுமையை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, செயலர் டி. ஜகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளது. இங்கு கோதுமை உற்பத்தி இல்லாததால் கோதுமையின் தேவைக்காக பிற மாநிலங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கடந்தாண்டு ஜூன் முதல் 8,532 டன் கோதுமை மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக மாதம் 15 ஆயிரம் டன் கோதுமையை அரிசிக்குப் பதில் ஒதுக்க வேண்டும்.

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்காக 60 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது. எனவே, திறந்த வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் எங்களுக்கு 60 ஆயிரம் டன் அரிசி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu