கனடா நாட்டின் வரலாற்றில், அரசாங்க ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 155000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக குடியேற்றம் பொதுத்துறை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கனடா நாட்டிற்கு செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சர்வதேச மாணவர்கள் பாதிப்படையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற அரசு பொதுத்துறை சேவைகளில் தாமதங்கள் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும்” எனக் கூறினார்.