மெட்ரோ ரெயில் பணிக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163 கோடியில் ஒப்பந்தம்

January 12, 2023

சென்னை மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம்-2 ல் வழித்தடங்கள்-3 மற்றும் 5-ல் 60 கிலோ 1080 எச்.எச். தரத்தில் தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானில் உள்ள 'எம்.எஸ் மிட்சுயி அன்ட் கோ' நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் […]

சென்னை மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம்-2 ல் வழித்தடங்கள்-3 மற்றும் 5-ல் 60 கிலோ 1080 எச்.எச். தரத்தில் தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானில் உள்ள 'எம்.எஸ் மிட்சுயி அன்ட் கோ' நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் த.அர்ச்சுனன் (திட்டங்கள்), ஜப்பான் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் ஹாஜிம் மியாகே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் 3 அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தண்டவாளங்கள் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் -2 ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சி.எம்.டி.ஏ. வரை பயன்படுத்தப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu