சாட் நாட்டில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் நடைபெற்றதில் 113 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் குடியரசு, லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
சமீபத்தில், சாட் நாட்டின் லேக் சாட் பகுதியில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் ராணுவ சோதனைச்சாவடியை திடீரென தாக்கினர். ராணுவம் அதற்கு பதிலடி அளித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் 17 ராணுவ வீரர்கள் மற்றும் 96 பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 113 பேர் உயிரிழந்தனர்.