யு .பி.ஐ (UPI) மீது கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை - மத்திய நிதி அமைச்சகம்
நிலவி வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகம் இது பற்றி தனது ட்விட்டர் பதிவில், "யு .பி.ஐ என்பது பொருளாதாரத்திற்கான உற்பத்தித்திறன் வாய்ந்தது மற்றும் பொதுமக்களுக்கு ஆதாயம் கொண்ட ஒரு டிஜிட்டல் சேவையாகும் . இந்த சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க அரசாங்கம் கருத்தவில்லை."என்று பதிவிட்டது. மேலும் அப்பதிவில் அரசானது கடந்த ஆண்டு #DigitalPayment சுற்றுச்சூழல் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியுள்ளது என்றும் #DigitalPayments ஐ ஊக்குவிப்பதற்காகவும், சிக்கனமான மற்றும் பயனர்-நட்புடைய கட்டண தளங்களை மேம்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது" என்றும் ௯றப்பட்டது.
யு .பி.ஐ மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து RBI பரிசீலித்து வருவதாக பல ஊடக அறிக்கைகள் வெளியானது. அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் இத்தகைய அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.