சென்னை மாவட்டத்தில் தேர்தலை கண்காணிக்க 192 குழுக்கள்

March 11, 2024

சென்னையில் பாராளுமன்ற பணியில் ஈடுபட 4 வகை சிறப்பு குழுக்களில் தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு,கணக்கியல் குழு ஆகியவற்றிற்கு தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டு இதில் 496 பேர் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் பின்பற்ற வேண்டிய […]

சென்னையில் பாராளுமன்ற பணியில் ஈடுபட 4 வகை சிறப்பு குழுக்களில் தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு,கணக்கியல் குழு ஆகியவற்றிற்கு தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டு இதில் 496 பேர் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டுவரப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க
இஎஸ்எம்எஸ் என்ற இணைய பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் மூலம் வீடியோ பதிவு செய்பவருடன் வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க வேண்டும். மேலும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சோதனை பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu