நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் மைக்ரோசாஃப்ட் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் விமான முன்பதிவு மற்றும் பணத்தை திரும்ப வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனையை தீர்க்க மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் 40 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும், எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பெங்களூரில் இருந்து செயல்பட இருந்த 90 சதவீத விமான சேவைகளும் பாதிப்படைந்துள்ளது.மேலும் இந்த விமான சேவை பாதிப்பு நள்ளிரவு வரும் வரை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.