பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அரபிக்கடலில் அடிக்கடி கடக்கின்றனர். கடல் எல்லையை கடக்கும்போது பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்துள்ளது.