கடந்த 2022 செப்டம்பரில், டைமார்பஸ் என்ற விண்கல்லை நாசா வேண்டுமென்றே மோதியது. டார்ட் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த மோதலால் மனிதனால் ஏற்படுத்தப்படும் முதல் எரிநட்சத்திர பொழிவு உருவாகும் என்று தெரியவந்துள்ளது.
டார்ட் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோதலால், டைமார்பஸ் வடிவம் மாறியதுடன், 2 மில்லியன் பவுண்டுகளுக்கு மேற்பட்ட குப்பைகள் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்ட கார்னெல் பல்கலைக்கழக ஆய்வின்படி, இந்த துண்டுகள் 10 முதல் 30 ஆண்டுகளில் பூமி அல்லது செவ்வாய் கிரகத்தை அடையலாம். இதனால், 100 ஆண்டுகள் வரை நீடிக்கும் விண்கல் மழை ஏற்படலாம். தானியங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரையிலான அளவில் உள்ள இந்த குப்பைகள் எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.