கடந்த ஜூன் 5ம் தேதி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக, ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் 2000 ஏக்கர் வாழைகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1000 ஏக்கர் வாழைகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
வாழை மட்டுமல்லாது, பலா, தென்னை, சோளம், நெல் ஆகிய பயிர்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் சோளம், 100 ஏக்கர் நெல் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களின் பாதிப்பு விவரங்கள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.