அமெரிக்காவில் இருந்து 28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏராளமான புலம்பெயர்ந்தோரை அங்கிருந்து வெளியேற்ற வகை ஒரு புதிய கொள்கையை வெளியிட்டார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 28 லட்சத்துக்கும் அதிகமானோரை அமெரிக்கா வெளியேற்றி உள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் கூறி உள்ளது. தற்போது மெக்சிகோவில் கொரோனா அவசர நிலை உத்தரவு நேற்றுடன் காலாவதியானது. எனவே அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.