நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம்

December 28, 2022

நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாள நாட்டில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணிக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதிகாரி சௌர் பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், குங்கா பகுதியில் 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் பதிவானது. இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, […]

நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாள நாட்டில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணிக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதிகாரி சௌர் பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், குங்கா பகுதியில் 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் பதிவானது.

இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, வீடுகள், கட்டிடங்கள் குறித்த சேதமோ குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இதனிடையே நேபாள நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியிலும் அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.1 என்ற அளவில் பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu