மணிப்பூரில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் மதியம் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின்போது, மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் மேகலாயாவிலும் உணரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.