9 முதல் 12-ம் வகுப்பு வரை 2 பொதுத்தேர்வுகள்- தேசிய நிபுணர் குழு பரிந்துரை

9 முதல் 12-ம் வகுப்பு வரை 2 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேசிய நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறை தயாராகி உள்ள நிலையில், மேலும் துறை சார்ந்த நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பல சுற்று ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தேசிய வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பள்ளி வாரியங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கலை, அறிவியல் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை […]

9 முதல் 12-ம் வகுப்பு வரை 2 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேசிய நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறை தயாராகி உள்ள நிலையில், மேலும் துறை சார்ந்த நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பல சுற்று ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தேசிய வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பள்ளி வாரியங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கலை, அறிவியல் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யும்.

மேலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ. உட்பட பெரும்பாலான வாரியங்களில் குறைந்தது 5 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்திர முறையை இந்த குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்துவது, மாணவர்கள் தாங்கள் முடித்த படிப்புகளில் தயாராக இருப்பதாக உணரவும் இது உதவும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 12-ம் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாட வடிவமைப்பை தங்களே வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய கலைவடிவமைப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu