அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார். விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு நபருக்கு பலத்த காயமும், நான்கு பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. திடீர் துப்பாக்கி சூடு காரணமாக சிறுமி ஒருவர் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார். மேலும் பலர் இந்த துப்பாக்கி சூட்டில் காயப்பட்டதாக கூறப்படுகிறது.