சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்பு

February 11, 2023

சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர். அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆக இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி இடங்கள் எண்ணிக்கை 34. தற்போது […]

சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர்.

அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆக இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், அவர்கள் இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி இடங்கள் எண்ணிக்கை 34. தற்போது பணியில் 32 பேர் உள்ளனர். புதிதாக இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu