சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. விரைவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். இந்த வாரத்தில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் அடுத்த வாரத்தில் 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை தமிழ் வருட பிறப்பு மற்றும் வழக்கமான விடுமுறை நாட்கள் வருகிறது. இதேபோல் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வர உள்ளன. இதையடுத்து சென்னையில் […]

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

விரைவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். இந்த வாரத்தில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் அடுத்த வாரத்தில் 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை தமிழ் வருட பிறப்பு மற்றும் வழக்கமான விடுமுறை நாட்கள் வருகிறது. இதேபோல் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வர உள்ளன.

இதையடுத்து சென்னையில் இருந்து மும்பை, கோவா, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, ஐதராபாத், புனே, டார்ஜிலிங், கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாதத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலான விமானங்களில் இறுதி கட்டத்தில் உள்ளன. கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu