கம்போடியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
கம்போடியா நாட்டின் மேற்கில் கம்போங் சிபியு மாகாணம் உள்ளது. இங்கு மிகப் பெரிய இராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் வெடி பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெளிபொருட்கள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதி எங்கும் கரும்புகை மண்டலம் உருவானது. இந்த வெடி விபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.