பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு நடந்ததில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால் பலி எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில், ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட குறைவாக மக்கள் இருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் அந்த அம்சமும் பங்குப்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்திய காலங்களில், பாகிஸ்தான் வடமேற்கில் பயங்கரவாத தாக்குதல்களையும், தெற்கில் பிரிவினைவாத கிளர்ச்சியையும் சந்தித்து வருகிறது.