ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தோல்வியால் 20 செயற்கைக்கோள்கள் பூமிக்குள் விழுவதாக தகவல்

கடந்த வியாழக்கிழமை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. பால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் திட்டம் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிறுவ முடியாமல் போனது. எனவே, தற்போது விண்வெளியில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் பூமிக்குள் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டது. […]

கடந்த வியாழக்கிழமை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. பால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் திட்டம் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிறுவ முடியாமல் போனது. எனவே, தற்போது விண்வெளியில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் பூமிக்குள் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டது. ஆனால், செயற்கை கோள்களின் சுற்றுவட்ட பாதை உயரத்தை நீட்டிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செயற்கைக்கோள்கள் சுற்றுவட்ட பாதை உயரத்தை படிப்படியாக குறைத்து, பூமிக்குள் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது இவை முழுமையாக எரிந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கோ, விண்வெளியில் உள்ள இதர செயற்கைக்கோள்களுக்கோ இவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu