ஆந்திராவில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நான்கு கண்டெய்னர் லாரிகளில் 2000 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்
கஜரம்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்து வந்த 3 கண்டெய்னர் லாரிகளில் நடத்திய சோதனையில் கட்டு கட்டமாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி ரூபாய் 2000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தை விசாரணையில் ஹைதராபாத் ரிசர்வ் வங்கிக்கு கேரளாவில் இருந்து பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.