செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரத வங்கி பாரத வங்கி அறிவித்தது. இதனால் 2000 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஐந்து மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது. இன்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும் டெபாசிட் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் நாளை முதல் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என்று கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது. மீறி பெறப்பட்டால் அதற்கு நடத்துனர்கள் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.