இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அமால்பி கடற்கரை பகுதியில், 2000 ஆண்டுகள் பழமையான கடவுள் சிலை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலை ‘ஈராஸ்’ கடவுளுடையது என சொல்லப்பட்டுள்ளது. இவர் காதலுக்கான கிரேக்க கடவுள் ஆவார். ஈராஸ், டால்ஃபின் மீது பயணம் செய்யுமாறு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள சரணாலயம் ஒன்றில் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் கிமு 5ம் நூற்றாண்டை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தொடர்ந்து இந்த பகுதியில் நடத்தப்படும் அகழாய்வுகளில் பல்வேறு தொல் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1950 ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் தொல்பொருட்கள் கிடைத்த வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஈராஸ் சிலை மூலம், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமய வழக்கு தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது.














