ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இயற்பியலுக்கான 2022 நோபல் பரிசை
அலய்ன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கியது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு, பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போது இவர்கள் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் மதிப்புள்ள இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த மூன்று விஞ்ஞானிகளும் ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான சோதனை, சமநிலையற்ற தன்மையில் ஏற்படும் கூறுகள், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவற்றில் செய்த ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டது.
இந்த 3 விஞ்ஞானிகளும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியலுக்கு மட்டும் வழங்கப்படும் உல்ப்(wolfprize) பரிசை சேர்ந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.