சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டுக்கான “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இந்த விருது, 1995-ம் ஆண்டிலிருந்து சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்), ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரிய சான்றிதழ் வழங்கப்படும். விருதாளரை தமிழக முதல்வர் தேர்வு செய்கிறார். இந்த விருதுக்கான பரிந்துரைகள், சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தியவர்கள் அல்லது சாதனை பெற்றவர்கள் தங்களது விண்ணப்பங்களை 20-ஆம் தேதி உடன் சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சுயவிவரம், தொடர்பு எண், சமூக நீதிக்காக செய்த பணிகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் இவை அனைத்தும் விண்ணப்பத்தில் சேர்க்கப்பட வேண்டும்.