துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2025 ஆம் ஆண்டில் சென்னையில் E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அதிகரித்து வரும் நிலையில், இந்த போட்டி இந்தியாவில் மிக முக்கியமான நிகழ்வாக மாறும். மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் E-SPORTS சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த உலக சாம்பியன் போட்டி, இந்தியாவின் முக்கியமான E-SPORTS நிகழ்வாக அமையப்போவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.