வாட்ஸப் பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக்கிற்கு பகிர்வதால் மெட்டாவுக்கு அபராதம்
2021ஆம் ஆண்டில் வாட்ஸப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் செய்ததை அடுத்து, மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகள் இந்திய போட்டி ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், வாட்ஸப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கிற்கு பகிர்ந்தது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நியாயமற்ற நடைமுறைக்கு இந்திய போட்டி ஆணையம் ரூபாய் 213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், மெட்டா நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.














