9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 21வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ஃபிராங்க் கல்பர்ட்சன் எனும் விண்வெளி வீரர் எடுத்த தாக்குதலின் செயற்கைக்கோள் படத்தை நாசா டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
விமானங்கள் இரட்டைக் கோபுரங்களில் மோதிய போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்ட நாசா, 'செப். 11, 2001 அன்று நடந்த தாக்குதலில் 3,000 பேர் பலியாயினர். அந்த நாளின் 21வது ஆண்டு நினைவு நாளில், அந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களை மதிக்கிறோம்' என பதிவிட்டது. மேலும் அதில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் அமெரிக்க கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டது.
அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்த ஒரே அமெரிக்க விண்வெளி வீரர் ஃபிராங்க் கல்பெர்ட்சன் அவர்களின் குறிப்பையும் நாசா பகிர்ந்துகொண்டது. ஜனாதிபதி ஜோ பிடன் 9/11 தாக்குதல்களின் 21 வது ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு பென்டகனில் மாலை அணிவித்தார்.