பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கராச்சி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில், கராச்சி நகர் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய் கிழமை, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உடல்களை ஆய்வு செய்ததில், மூன்று பேர் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால், இவர்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுவரை 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், உடல்களை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.