நேற்று நடைபெற்ற இரண்டாவது மக்களவை கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் 22 பேர் பதவியேற்றனர்.
பதினெட்டாவது மக்களவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதனை தொடர்ந்து இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் எம்.பி களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதன்படி கூட்டத்தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்பிக்களாக பதவியேற்றனர். அதனை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று தமிழக எம்பிக்கள் பதவியேற்று கொண்டனர். அதில் திமுக எம்பிக்கள் 22 பேர் பதவியேற்றனர்.பதவி ஏற்பின் பொது திமுக எம்பிக்கள் 22 பேரில் 13 பேர் உதயநிதியின் பெயரை கோஷமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது