அன்றாடப் பயன்பாட்டு பொருட்களின் விலை 22% உயர்வு

October 1, 2022

நாம் நமது அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், அரிசி, நறுமண எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும், 10 முதல் 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, பிரபல மதிப்பீட்டு நிறுவனமான Bizom தெரிவித்துள்ளது. மேலும், உணவு அல்லாத பயன்பாட்டு பொருட்களான சோப்பு, சலவை பொருட்கள் போன்றவற்றில் 1-3% விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அத்துடன், இந்த விலை உயர்வு, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக, Bizom தனது […]

நாம் நமது அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், அரிசி, நறுமண எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும், 10 முதல் 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, பிரபல மதிப்பீட்டு நிறுவனமான Bizom தெரிவித்துள்ளது. மேலும், உணவு அல்லாத பயன்பாட்டு பொருட்களான சோப்பு, சலவை பொருட்கள் போன்றவற்றில் 1-3% விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அத்துடன், இந்த விலை உயர்வு, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக, Bizom தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக, குறிப்பாக கிராமப்புறங்களில், பொருட்கள் வாங்கப்படும் அளவு சரிந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 35% உயர்ந்தது. தற்போது, அதன் விலை சற்று குறைக்கப்பட்டு, 5 - 22% உயர்வு பதிவாகியுள்ளது. அதே வேளையில், மசாலா பொட்களின் விலையில் 3 - 17% உயர்வு உணரப்படுகிறது. மேலும், அரிசி மற்றும் கோதுமை மாவு விலைகளும் இரட்டை இலக்க விலையேற்ற விகிதத்தைக் கொண்டுள்ளன. இந்நிலையில், கடந்த காலாண்டில், பணவீக்கம் உச்சத்தை அடைந்த போது, உயர்த்தப்பட்ட சில பொருட்களின் விலை, நிலைமை சரியான பின்னரும், குறைக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய விப்ரோ கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் உணவு வர்த்தகத் துறைத் தலைவர் அனில் சுக், "சந்தை நிலவரங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவதால், இந்த விலையேற்றதிற்கான எல்லை எட்டப்படவில்லை. அதே வேளையில், பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் விலையைக் குறைக்கத் தயாராக இல்லை. மாறாக, அதிக விளம்பரங்கள் செய்யவே ஆர்வம் காட்டுகின்றன" என்று கூறினார்.

Bizom நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நுண்ணறிவு துறைத் தலைவர் அக்க்ஷய் டிசோசா, "தற்போது பண்டிகைக் காலம் தொடங்க இருப்பதால், பொருட்களின் தேவை அதிகரிக்கும். எனவே, பொருட்களின் வரவை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், விலையேற்றம் சற்று குறையும் என்று நம்பப்படுகிறது" என்று கூறியுள்ளார். மரிகோ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சவுகதா குப்தா இது குறித்து கூறியதாவது: "கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், வரும் காலாண்டில், விலைகள் குறையத் தொடங்கும்" என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu