பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக அரசு விரைவு பஸ்களில் இதுவரை 22,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பஸ் ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் அனைத்து ரயில்களிலும் இடம் நிரம்பிவிட்டதால் அரசு பேருந்துகளில் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் இந்த முறை ஐந்து நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஜனவரி 12 13 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய இதுவரை 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முறை ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் குடிக்க வைத்துள்ளனர்.