தமிழகம் முழுவதும் உள்ள 2300 ஏரிகள் ஆழப் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும் வழக்கு தொடரப்பட்டது. தற்போது ஜூன் மாத கணக்கின்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7529 ஏரிகள் ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தில் உரிமைகளை பாதுகாக்க உரிமை நாடி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக வங்கி உதவியுடன் தமிழகம் முழுவதும் உள்ள 2300 ஏரிகள் ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.