தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா (ஐயப்பன்) திருக்கோயிலில் மண்டல பூஜை இன்று முதல் டிசம்பர் 27ம் தேதி வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 27 முதல் ஜனவரி 14 வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மையம் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை செயல்படும். இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.