சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து

December 9, 2022

புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை-தூத்துக்குடி மற்றும் சீரடி உட்பட 6 விமானங்கள் காலையில் ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா […]

புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை-தூத்துக்குடி மற்றும் சீரடி உட்பட 6 விமானங்கள் காலையில் ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் வலுவிழந்தது. இன்று இரவு புயல் கரையை கடக்க உள்ளதால் மழை அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu