மத்திய அரசு எண்ணெய் இறக்குமதி வரியை 25% அதிகரித்துள்ளதால் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
நாட்டில் புதிய வரி நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களில், சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், மற்றும் தீப எண்ணெய் ஆகியவற்றின் விலை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாமாயில் லிட்டருக்கு ரூ.15 உயர்ந்து, மளிகை கடைகளில் ரூ.110 ஆக விற்கப்படுகிறது. அதே நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் கடலை எண்ணெய்கள் லிட்டருக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் எண்ணெய் தேவையும் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.














