இந்தியாவில் மருந்துகள் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
புளூ காய்ச்சலுடன் எச்1 என்1 என்னும் ஒருவகை இன்புளூயென்சா வைரஸ் கிருமி தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையில் ஒரு வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.
பிப்ரவரி மாதத்தில் நோய் தொற்று எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.22,883 கோடியாக இருந்தது. சுவாச மருந்துகள் கடந்த மாதம் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.14,880 கோடியாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய மருந்துகள் விற்பனை 26.1 சதவீதம் அதிகரித்து ரூ.2,766 கோடியாக உள்ளது. வலி நிவாரணி மருந்துகள் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,898 கோடியாக உள்ளது.