இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 25,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஜனவரி மாதத்தில், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்தன. பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அதிகரித்து வரும் பணி நீக்கங்களை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் ஊழியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், 25000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பணி நீக்கங்களுக்கான முக்கிய காரணங்களாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவு, நிறுவனங்களின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கை ஆகியவை கூறப்படுகின்றன.