தென் ஆசியாவின் முதல் உயரமான கட்டிடமாகவும், 1,269 கோடி செலவில் இரட்டைவழி சுரங்கப்பாதை திட்டம்
பெங்களூரு நகருக்கு வெளியே அமைக்கப்பட உள்ள ஸ்கைடெக்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 250 மீட்டர் உயரமுடைய ஸ்கை டெக் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்திற்கு கர்நாடகா அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள குதுப்மினார் கட்டிடத்தைவிட மூன்று மடங்கு உயரமான இந்த ஸ்கை டெக், தென் ஆசியாவின் முதலாம் உயரமான கட்டிடமாக அமைய இருக்கும்.மேலும், ரூ.1,269 கோடி செலவில் பெங்களூருவில் ஹெப்பல்-சில்க் போர்டு ஜங்ஷன் வரை இரட்டைவழி சுரங்கப்பாதை அமைப்பதற்கும், அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.