குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள 2C மாடல் ஆப் குஜராத் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கடந்த 2 நாட்களாக குஜராத்தில் 2C மாடல் ஆப் குஜராத் என்ற பெயரில் புதிய ஹேஸ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதில் 7,000 அரசு பள்ளிகள் மூடல், நாட்டின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் ஒரு குஜராத் பல்கலைக்கழகம் கூட இடம்பிடிக்காதது, நௌசாரி வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் தனியார் ஹோட்டல் கட்டப்பட்டது போன்றவை இடம்பிடித்துள்ளன.
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் அதானி துறைமுகங்கள் மூலம் 5,222 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது, மோர்பி பால விபத்தில் 136 பேர் இறந்தது, குடிநீர் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் பா.ஜ.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.